அமைதிப் படைக்கு தடுப்பூசி

ஐ.நா. அமைதிப் படைக்கு நமது பாரதம் சார்பில் முன்னதாகவே வாக்குறுதி அளித்தபடி, இலவசமாக 2 லட்சம் ‘டோஸ் கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்து தலா இரு டோஸ்கள் வீதம் அமைதிப் படையினருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு போர் பதற்றம் நிலவும் 12 நாடுகளில் பாதுகாப்புப் பணியில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 87,889 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் நமது பாரதத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.