ஐ.எம்.ஏ தலைவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஹிந்து மதத்திற்கு எதிராகவும் கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாகவும் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர் இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐ.எம்.ஏ)வின் தலைவர் ஜெயலால். இவர், தனது தலைவர் பதவியை முறைகேடாக பயன்படுத்தி நோயாளிகள், சக மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என அனைத்து ஹிந்துக்களையும் கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் ஹிந்து மதம் மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரதத்தின் பாரம்பரிய மருத்துவங்களுக்கு எதிராக பேசுவது, பத்திரிகைகள் ஊடகங்களில் எழுதுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் மீது நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவரின் நேர்காணல்கள், எழுதிய கட்டுரைகள் இதற்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மதப் பிரச்சாரம் செய்ய, இந்திய மருத்துவர் சங்கத்தை ஜெயலால் பயன்படுத்தக்கூடாது, இந்திய அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.