சாது சுந்தர் செல்வராஜ் மீது வழக்குப் பதிவு

‘ஜீஸஸ் மினிஸ்ட்ரிஸ்’என்ற அமைப்பை நிறுவி காவி உடையில் மக்களைக் குழப்பி மதம் மாற்றுவது, ஹிந்து மதத்தை இகழ்வது, போலி நம்பிக்கைகளை பரப்புவது என செயல்படுபவர் சாது சுந்தர் செல்வராஜ். சமீபத்தில் இவர், கொரோனா தடுப்பூசிகள் குறித்து பல போலியான தகவல்களை மக்களிடம் பரப்பினார்.அதில், கொரோனா தடுப்பூசியில் சாத்தானின் சின்னம் உள்ளது, அதில் சிப் வைத்துள்ளனர் என்பது போல பல பொய்யான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.மேலும், அந்த வீடியோக்களில் ஹிந்து மதத்தினர், அப்பாவிகளையும் கிறிஸ்தவர்களையும் கட்டாயப்படுத்தி ஊசி போடவைப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது.இந்த வீடியோக்களை அவர் தன் சொந்த ‘ஏஞ்சல் டி.வி’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தார்.இது குறித்து அவர் மீது தற்போது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், அப்பாவி மக்களிடம் தவறான பிரசாரங்கள் செய்து, அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் தடுக்கும் செல்வராஜ் மீது குண்டர்கள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.