சீனாவின் உயிரியல் போர்

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகம் முழுதும் உள்ள எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.லட்சக்கணக்கில் இறந்துள்ளனர்.பல நாடுகள் மோசமான பொருளாதார பேரிழப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியும் மருத்துவருமான லாரன்ஸ் செல்லின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், ‘கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.இது, சீனாவால் திட்டமிடப்பட்டு உலக நாடுகளின் மீது நடத்தப்பட்ட ஒரு ‘பயோவார்’ எனப்படும் உயிரியல் போர்.இதற்கு, சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் ராணுவமும்தான் முழு பொறுப்பு.கொரோனா பரவலால், உலக நாடுகள் மோசமான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், சீனா மட்டும் அமைதிகாத்து வருவது அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவிலும், கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதை, சீன கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.எனினும், அதற்கான உரிய தகவல்களை அவர்களிடம் இருந்து நம்மால் பெற முடியவில்லை’ என கூறியுள்ளார்.