மேன் மக்கள் மேன் மக்களே

தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையால் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனால் பலரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாம்பலத்தில் தள்ளு வண்டியில் சுண்டல், வடை விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் நபர், தற்போது பல ஏழை மக்கள் உணவின்றி தவித்து வருவதால் தன்னால் முடிந்த அளவுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறார். இவரின் இந்த செயலுக்கு, சமூக ஊடகத்தில் பலரும் தங்களுடைய பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.இவரைபோல சிலர் ஆங்காங்கு எவ்வித விளம்பரமும் இன்றி தங்களால் முடிந்த தொண்டுகளை செய்து வருகின்றனர்.இந்த கடினமான காலகட்டத்திலும் சத்தமில்லாமல் தங்களால் முடிந்த அளவு மக்களுக்கு உதவும் இவர்களை போன்றவர்களின் நல்ல மனது நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது!?