யதி நர்சிங்கானந்த் மீது கொலை முயற்சி

உத்தர பிரதேசம், காஜியாபாத்தில் உள்ள தஸ்னா தேவி கோயில் பூஜாரியாக உள்ளவர் யதி நர்சிங்கானந்த். இவர் ஹிந்துக்களுக்காக போராடி வருபவர், மதமாற்றம், லவ் ஜிஹாத் உள்ளிட்ட பல பிரச்சனைனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர், இதனால், அவரின் மீது பலமுறை முஸ்லிம் பயங்கரவாதிகள் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர் மீது மற்றொரு கொலை முயற்சி சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது.இது குறித்து உதவியாளரான அனில் யாதவ் போலீசில் புகார் அளித்தார்.காஷிஃப், விபுல் என்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து மூன்று அறுவை சிகிச்சை கத்திகள் மற்றும் சில விஷப் பொடிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் ஈராஜ் ராஜா தெரிவித்துள்ளார்.பிடிபட்டவர்களிடம் இருந்த பையை அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் வாசலில் சோதனையே செய்யாமல் உள்ளே விட்டுள்ளனர் என்று புகார் கூறப்பட்டுள்ளது.கடந்த மே 17ல்கூட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி இவரை கொல்ல முயற்சித்து பிடிபட்டான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.