மசூதியில் மதகுரு கைது

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள மசூதி ஒன்றில், 12 வயது சிறுமி ஒருவர் தண்ணீர் எடுக்கச் சென்று இருக்கிறார்.அப்போது, அங்கு இருந்த 48 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் மதகுரு ஒருவர், சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.மேலும், இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.வீட்டிற்கு சென்ற சிறுமி, நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பந்தப்பட்ட முஸ்லிம் மதகுரு மீது டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.அந்த முஸ்லிம் மதகுரு மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.#JusticeForOurGirl என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயில்கள் அல்லது எதாவது மடத்தில் இதுபோன்று நடந்திருந்தால் குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளும், சமூக அர்வலர்களும், சினிமா பிரபலங்களும் தற்போது வாய் மூடி மவுனம் காப்பது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.