பாதிரிகளை அடக்க வாடிகன் புதிய சட்டம்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ், சிறாருக்கு பாலியல் தொல்லை தரும் பாதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யும் சட்டத்தை சில வாரங்களுக்கு முன் அமல்படுத்தினார். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கானப்பட்டது. இந்நிலையில், சிறார்கள் மட்டுமின்றி வயது வந்தோரும் பாதிரியார்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாகின்றனர். அப்படி நடக்கும் குற்றங்களை கிரிமினல் குற்றமாக பதிவு செய்வதற்கான சட்ட திருத்தத்தை போப் அறிவித்துள்ளார்.