கருப்பு பூஞ்சைவிழிப்புணர்வு

கொரோனா தொற்றைத் தொடர்ந்து கரும்பூஞ்சை நோய் பரவி வருகிறது. தொற்று நோய் சட்டத்தின் கீழ் கருப்பு பூஞ்சை நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பொதுமக்களிடையே இந்த நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் நோய் முற்றிய பிறகே சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே, கருப்பு பூஞ்சை குறித்து முன்னரே கண்டுபிடிக்க, புதுச்சேரி மக்களிடையே அது குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து வேலைகளையும் அரசு செய்து வருகிறது’ என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.