வங்கிகளுக்கு விஜய் மல்லையா சொத்துக்கள்

தொழிலதிபர் விஜய் மல்லையாபல்வேறு வங்கிகளில் கடன் பெற்று சுமார் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்துள்ளார். பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற அவரை அங்கிருந்து நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.இந்நிலையில் மல்லையாவுக்கு சொந்தமான பல சொத்துக்களை அமலாக்க துறை முடக்கி வைத்துள்ளது.அதில் குறிப்பிட்ட சிலவற்றை வங்கிகள் குழுமத்துக்கு வழங்க மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கடந்த வாரத்திலும் இதேபோன்று வேறு சில சொத்துக்களை வங்கிகள் குழுமத்துக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மல்லையாவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.