வேலூர் இப்ராஹிமிற்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் சிறுபான்மையினரின் சார்பாக கட்சிப்பணி, அரசியல் பிரச்சாரம் ஆகியவற்றில் முழுமையாக ஈடுபட்டவர் வேலூர் இப்ராஹிம். அவர் தற்போது பா.ஜ.க. வின் அகில இந்திய மைனாரிட்டி மோர்ச்சாவின் செயலாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு, பா.ஜ.க மாநில தலைவர் முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை ஐ.பி.எஸ், அகில இந்திய மகளிர் அணியின் தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.