கொரோனா தடுப்பூசி அன்றே சான்றிதழ்

மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருவதுடன் தடுப்பூசி போடுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு, கோவின் செயலியை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி, தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான நாள் அல்லது நேரத்தை மாற்றியமைக்க, தேர்ந்தெடுக்க கோவின் செயலியில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும்,தடுப்பூசி கொண்ட பயனாளர்களுக்கு அன்றைய தினமே சான்றிதழ் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.