சீனாவிற்கு எதிராக அமெரிக்கா

சீனாவின் வூஹான் நகரில், இருந்து பரவிய கொரோனா வைரசால் இதுவரை உலகெங்கும்  சுமார் 17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.இதனால் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், பின்னடைவுகள், வேலை இழப்புகள் என தொடரும் பாதிப்புகள் ஏராளம்.வூஹானில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து வைரஸ் பரவியதாக சீனா கூறி வருகிறது.ஆனால், வூஹான் வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என, உலக நாடுகள் அறுதியிட்டு கூறி வருகின்றன. இது தொடர்பாக விசாரித்த உலக சுகாதார அமைப்பும் அதன் தலைவர் டெட்ராஸ் அதானமும் ‘வூஹான் ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் பரவியதற்கு வாய்ப்பில்லை’ என சீனாவுக்கு ஆதரவாக கூறியவருகின்றனர். ஆனால், அதனை உலக நாடுகள் நம்பவில்லை. இந்நிலையில், வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தின. ‘பரவலுக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை ஆனால், வூஹான் வைரஸ் ஆய்வு மையத்தில் பணியாற்றிய பல ஆராய்ச்சியாளர்கள், 2019ல் கொரோனா போன்றதொரு நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை துரிதப்படுத்தி விசாரணை அறிக்கையை 90 நாட்களுக்குள் அளிக்க உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். மேலும், வைரஸ் பரவலுக்கான முழு காரணம் தெரிய ஒத்துழைக்கும்படி நட்பு நாடுகளுடன் இணைந்து சீனாவுக்கு நெருக்கடி தருவோம் என அவர் கூறியுள்ளார்.