பா.ஜ.கவின் மக்கள் தொண்டு தினம்

மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவை, மக்களுக்கு தொண்டாற்றும் தினமாக கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழகம் முழுவதும் இருக்கிற பா.ஜ.கவினர் அனைவரும் மக்களுக்கு சேவை செய்கிற தினமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும். தடுப்பூசி விழிப்புணர்வு, ரத்ததான முகாம்கள், கொரோனா சிகிச்சை உதவிகள், முகக் கவசம், கபசுர குடிநீர் வழங்குவது, ஏழை மக்களுக்கு, உணவு பொருட்கள் வழங்குவது என பலவித சேவைகளை மேற்கொள்ள வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.