திருநங்கைகளுக்கு உதவித்தொகை

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் திருநங்கைகளும் விதிவிலக்கில்லை.இந்நிலையில், ‘திருநங்கைளுக்கு உதவ வேண்டும்’ என்று திருநங்கைகள், தன்னார்வலர்கள்’ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இததனை பரிசீலித்த மத்திய அரசின் திருநங்கைகளின் நலனை கவனிக்கும் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், திருநங்கைகளுக்கு உதவிடும் வகையில் தலா ரூ.1,500 வழங்க முடிவு செய்துள்ளது. திருநங்கைகள் அல்லது அவர்கள் சார்ந்துள்ள சமுதாய அமைப்புகள் http://forms.gle/H3BcREPCy3nG6TpH7 என்ற இணைய பக்கத்தில் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை தெரிவித்து உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.