காஞ்சி சங்கர மடம் கரோனா நிவாரண நிதி

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து பலர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ச்சியாக செய்து வரும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் காமக்கோடி பீடம் அறக்கட்டளை சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ. 25 லட்சம் வழங்க சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர், நிர்வாகிகள் பம்மல் விஸ்வநாதன், வழக்கறிஞர் டி.ஆர். ராஜகோபாலன், டி.எஸ்.ராகவன் ஆகியோர் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கினர்.