ஸ்டாலின் மதுரை விஜயத்தில் களேபரம்

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று முதல் முறையாக மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். அப்பொழுது அவர் வருவதை அறிந்து கொண்ட செவிலியர்கள், லேப் டெக்னிசியன்கள், முதல்வர் காப்பிட்டு திட்ட ஊழியர்கள் என முன்னூறுக்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் மனுவாக அளிக்க அங்கு கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். திடீரென 300 க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பதற்றமடைந்த காவல்துறையினர் அவர்களை கலைந்து போக கூறியுள்ளனர். ஆனால், அங்கு கூடியிருந்த மருத்துவ உதவி பணியாளர்கள், தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் நேரில் மனுவாக அளித்த பிறகே கலைந்து செல்வோம் என கூறியதால் அங்கு வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் ஒரு முதியவர், முதல்வரை சந்திக்க அனுமதி வேண்டி கையில் டீசல் கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை தடுத்த காவல்ர்கள் அந்த முதியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இந்த கலவரத்தை தொடர்ந்து அங்கு வந்த ஸ்டாலின், மூன்றே நிமிடங்களில் அங்கிருந்து சென்றுவிட்டார். மருத்துவ உதவி பணியாளர்களை பார்க்கவில்லை, அவர்கள் கோரிக்கை மனுவையும் வாங்கவில்லை.