தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு

கோயில்களின் சொத்துகள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற ஹிந்து சமய அறநிலையத் துறையின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ள கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர், சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பதிவில், ‘‘அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள். சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.