நாடு தழுவிய ஆயுஷ் ஹெல்ப்லைன்

கொரோனா தொடர்பான பிரச்சனைகளுக்கு, ஆயுர்வேதம், சித்தா, யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, ஹோமியோபதி துறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் அடிப்படையிலான அணுகுமுறைகளையும், தீர்வுகளையும் வழங்குவதற்காக, பிரத்யேகமாக 14443 என்ற ஹெல்ப்லைன் ஒன்றைத் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியுள்ளது. கட்டணமில்லா இந்தத் தொலைபேசி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை, வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும். பாரதம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்காக, இந்த ஹெல்ப்லைனில் குறிப்பிட்டத் துறைகளைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் ஆலோசனைகளையும், தீர்வுகளையும் வழங்குவர். மேலும், அருகிலுள்ள ஆயுஷ் வசதிகள் குறித்தும் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள். தற்போது ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் ஆலோசனை வழங்கப்படுகிறது. விரைவில் பிற மொழிகளிலும் ஆலோசனைகள் கிடைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆரம்பக் கட்டமாக ஹெல்ப்லைனில், ஒரே நேரத்தில் 100 அழைப்புகளை கையாளும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் திறன் அதிகரிக்கப்படும். ‘ஸ்டெப்ஒன்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஆயுஷ் அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.