சூப்பர் ஸ்ப்ரெட்டராகும் விவசாய போராட்டம்

விவசாய சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக டெல்லி எல்லைப் பகுதியில் விவியசாயிகள் என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருபவர்களால் அங்குள்ளவர்கள் கொரோனா சூப்பர் ஸ்ப்ரெடராக மாறும் வாய்ப்பு அதிகம் என முன்கூட்டியே பலமுறை எச்சரிக்கை விடப்பட்டது. போராட்ட இடத்திலேயே பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், ஒரு சிலர் இறந்தும் உள்ளனர். ஆனால் அப்போது யாரும் அதனை பொருட்படுத்தவில்லை. தற்போது, பஞ்சாபில் கொரோனா தொற்று அதிகரிப்பு உண்மையில் விவசாய போராட்டத்துடன் தொடர்புடையதுதான் என்பதை பஞ்சாப் அமைச்சர் டிரிப்ட் ராஜீந்தர் சிங் பஜ்வா நியூஸ் 18க்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.