நேஷனல் ஹெரால்டு வழக்கு இறுதி விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள ‘யங் இந்தியா’ என்ற நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்துள்ளதாக பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். டில்லி நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் வழக்கு தொடரவும்,  சாட்சியங்களை முன்வைக்க அனுமதிக்கும்படியும், டில்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து பதிலளிக்க சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அனைத்து தரப்பும் பதில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், வரும் ஜூலை 30ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.