வன்முறையை கண்டிக்கும் பாரதம்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் சமீபத்தில் நடந்த வன்முறைகளைக் கண்டித்துள்ள பாரதம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க கேட்டுக்கொண்டது. ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளாவில் வசிக்கும் சௌமியா சந்தோஷ் என்ற இந்திய பிரஜையின் மரணம், மேலும், இந்த வன்முறையில் உயிரிழந்த அனைவருக்கும் இரங்கல் தெரிவித்த ஐ.நாவுக்கான இந்திய தூதர் எஸ். திருமூர்த்தி,’இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார். மேலும் இரு தரப்பினரையும், தற்போதுள்ள நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும்முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.