71 அடி நவகாளி சிலை

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அருகே காராப்பாடி அணையப்பாளையம் சாலையில் உள்ள அம்மன் கோயிலில் விநாயகர், நவ காளியம்மன், கருப்பராயனுக்கு சன்னதிகள் உள்ளது. இங்கு, தமிழகத்திலேயே முதல்முறையாக நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மனுக்கு வரும் ஆனி மாதத்தில் கும்பாபிஷேக விழா நடத்தவுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கான திருப்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.