3 கோடி பேர் இணைந்த இ ஷ்ரம்

மூன்று கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இ ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டுள்ளனர். மத்திய அரசு துவங்கியுள்ள இந்த இணையதளத்தில் பதிவு செய்வதால் அமைப்புசாரா தொழிலாளர்கள், அரசு திட்டங்களின் பயன்களை எளிதாக பெற முடியும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசின் திட்டங்களும் நன்மைகளும் சென்று சேர முறையான எந்த வழியும் இதுவரை இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது, ​​இ ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்வதால் அவர்களுக்கு நாடு முழுவதும் செல்லத்தக்க ஒரு பிரத்தியேக எண் கொண்ட அட்டை வழங்கப்படும். அவர்கள் நாட்டின் எந்த மூலையில் பணிபுரிந்தாலும் அரசு சலுகைகள், திட்டங்களின் பயன்கள் அவர்களை நேரடியாக சென்று சேரும் என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.