ஜி.எஸ்.டி மோசடி 23 நிறுவனங்கள் சிக்கின

மேற்கு டெல்லியில் பிரபலமான 19 நிறுவனங்கள் உள்பட 23 நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி கடனைப் பயன்படுத்தி, உண்மையான ஜி.எஸ்.டி வரியை அரசுக்கு செலுத்தத் தவறியுள்ளன. தற்போதைய நிதியாண்டில் மட்டும் ரூ. 91.256 கோடி மோசடி நடைபெற்று உள்ளது. உளவுப் பிரிவு தகவலை அடுத்து, இதனை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து கண்டுபிடித்தனர். மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பை சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.