20 கோடி தேசியக்கொடிகள்

நாடு முழுவதும் 75வது சுதந்திர தின விழா மிக உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சிறப்பிக்கும் வகையில் வீடுகள் தோறும் நேற்று முதல் 15ம் தேதி வரை தேசிய கொடி ஏற்றுங்கள் என கடந்த 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்தார். சமூக வலைதளங்கள் மூலமும் இதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து தபால் நிலையங்கள், அரசின் இ மார்க்கெட் பிளேஸ் மூலமும் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டன. பொதுமக்கள் ஆர்வத்துடன் தேசியக் கொடிகளை வாங்கிச் சென்றனர். இதனால் தேசிய கொடி விற்பனை மும்முரமாக நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கொடிகளை தங்கள் வீடுகளில் ஏற்றியுள்ளனர். பொதுமக்கள் ஆர்வம் காரணமாக இதுவரை பாரதம் முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகள் விற்பனை ஆகியுள்ளதாக மத்திய கலாச்சார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.