10வது பயங்கரவாதி கைது

பா.ஜ.அக முன்னாள் செய்தித் தொடர்பாளருக்குன் ஆதரவு தெரிவித்த மகாராஷ்டிராவை சேர்ந்த மருந்துக் கடைக்காரர் , உமேஷ் கோஹ்லேவை முஸ்லிம் அடிப்படைவாதிகள் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசரிக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது பத்தாவது குற்றவாளியாக 28 வயதான ஷேக் ஷகீல் என்பவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலை சதியில் ஷேக் ஷகீல் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் வழக்கில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன எனவும் என்.ஐ.ஏ கூறியுள்ளது.