1,000 கோடி மதிப்பு நிலம் மீட்பு

சென்னை கோட்டூர்புரம், கெனால் பேங்க் சாலையில் உள்ள செயின்ட் பேட்ரிக் என்ற கிறிஸ்தவ கல்வி நிறுவனம், அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 19.66 ஏக்கர் நிலத்தில் 5.20 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. இதன் சந்தை மதிப்பு, 1,000 கோடி ரூபாய். நீதிமன்றத்தில், இந்த நிலம் குறித்த தவறாக தகவல்கள் அளித்தும், தடை உத்தரவு பெற்றும் தேவையில்லாமல் வழக்கை இழுத்தடித்து வந்தது அந்த கல்வி நிறுவனம். இதனை மீட்க, மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி மீட்கச் சென்றனர். கல்வி நிர்வாகம், அங்கு பயிலும் கல்லுாரி, பள்ளி மாணவர்களை மூளைசலவை செய்து சாலை மறியலில் ஈடுபடவைத்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனர்.