நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000

தமிழகத்தில், பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 1,000, எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம், மாதம் தோறும் மின்கட்டணம் கணக்கெடுப்பு போன்ற பல திட்டங்கள் வெற்று அறிவிப்பாகவே இதுவரை இருந்து வருகிறது. இந்த சூழலில், பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசத்தில், அதன் முதல்வர் சிவராஜ்சிங் சௌஹான், பெண்களுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் ‘முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்படி, வருமானவரி செலுத்தாதவர்கள் மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இந்த மாதம் 15ம் தேதியில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மே 31ல் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 10ம் முதல் அவர்களுக்கு மாதம்தோறும் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். இத்திட்டத்துக்காக மாநில நிதிநிலை அறிக்கையில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிவராஜ்சிங் சௌஹான் கூறியுள்ளார்.