மோடிக்கு மமதா கோரிக்கை கடிதம்

மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாவை மத்திய அரசு பணிக்கு அழைத்து உத்தரவிட்டதுடன், அவரை உடனடியாக விடுவிக்குமாறும் மாநில அரசிடம் கோரியது. ஆனால், மேற்கு வங்க அரசாங்கத்தால் அவரை விடுவிக்க முடியாது.இந்த முக்கியமான நேரத்தில் எங்கள் தலைமை செயலாளரை விடுவிக்கமாட்டோம்.” என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேற்கு வங்க ஐ.ஏ.எஸ் அதிகாரியான அலபன் பாண்டியோபாத்யாய் மே 31ல் ஓய்வு பெறவிருந்தார்.கொரோனா நிர்வாகத்தில் பணிபுரிய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவருக்கு மூன்று மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.இந்த நிலையில்தான் அவர் மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.