பத்திரிகையாளர் குடும்பத்துக்கு 10 லட்சம்

கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். ஹிந்தி பத்திரிகை தினத்தை முன்னிட்டு, இந்த உதவியை முதல்வர் அறிவித்தார். மேலும், இறந்த ஊடகவியலாளர்களின் விவரங்களை மாநில அரசின் தகவல் துறை ஏற்கனவே சேகரித்ததாகவும், நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை அன்றே அவர்களது குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.