ஸ்ரீ நாரதர் விருது

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக, கோவையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் முன்னாள் முதன்மை எழுத்தாளரான ராதா வெங்கடேசன், ஹிந்து தமிழ் திசை நாளிதழின் பொது மேலாளர் ஸ்ரீ ராஜ்குமார், சமுதாய சிந்தனை கொண்ட எழுத்தாளர் ஸ்ரீ ஜோதி கணேசன் ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2021 வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கோவை தினமலர் நாளிதழின் முதன்மை ஆசிரியர் K.விஜயகுமார் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ் தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீராம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து ‘நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம்’ எனும் நூலின் ஒலி வடிவ புத்தகம் வெளியிடப்பட்டது.