ஸ்ரீநகரை காப்பாற்றிய சங்கம் ராணுவத்தின் கேடயமாக!

 

வருடம் 1965ம் பாரதம் பாகிஸ்தான் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்த நேரம். காஷ்மீருக்காக நடந்த போரில் பாகிஸ்தான். வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க, காஷ்மீருக்கு பாரத ராணுவ உதவி அவசரமாக தேவைப்பட்டது. தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஸ்ரீநகர் ஒரு அவசர செய்தியைப் பெற்றது.

“போரில் ஸ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப் பட வேண்டாம் ஆனால் எக்காரணம் கொண்டும், ஸ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக் கூடாது. நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம்” என்று…! ஆனால் ஸ்ரீநகரிலிருந்து, “இங்கு எங்கு பார்த்தாலும் கடுமையான பனிப்பொழிவு. விமான நிலையத்தில் உதிரம் உறைந்து போகுமளவு கடுமையான பனிமழை பொழிவு..!

இதன் ஓடுதளத்தில் விமானங்கள் தரை இறங்குவது என்பது இயலாத காரியம் மட்டுமல்ல கடினமானது” என்று பதில் அனுப்பியது..

உடனே டெல்லி, “தற்காலிக பணியாளர்கள் எவ்வளவு பேர் வேண்டுமானாலும், எவ்வளவு ஊதியத்தில் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளுங்கள். விமான நிலையம் மட்டும் முக்கியம். தகுந்த நடவடிக்கை உடனே எடுக்கவும்” என பதில் உத்தரவிட்டது.

“இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைக்க வில்லை, கிடைக்காது” என ஸ்ரீநகரில் இருந்து பதில் வந்தது. அப்போதுதான் ராணுவ தலைமையகத்தின் கவனத்திற்கு, ஆர்.எஸ்.எஸ் இயக்கம் நினைவிற்கு வந்தது. அப்போது நள்ளிரவு 11.00 மணி. தொலைபேசிகள் சுழன்றன. ஒரு ராணுவ ஜீப், ஸ்ரீநகரின் ஆர்.எஸ்.எஸ் அலுவலக வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய உயர் அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தினுள் நுழைந்தனர். உள்ளே, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக்குகளின் இளைஞர் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது.

சி.எம். பிரேம்நாத் எடோக்ரா, அர்ஜூன் ஆகியோர் அங்கிருந்தனர். அவர்களிடம் ராணுவ அதிகாரிகள் நிலைமையை விளக்கி, அவர்களால் விமானநிலைய பனிப்பொழிவை அகற்ற உதவ முடியுமா?”எனக் கேட்டனர்.

அர்ஜூன்,”நிச்சயமாக..! உங்களுக்கு உதவி செய்ய எத்தனை பேர் வேண்டும்?” எனக் கேட்க, அதிகாரி, “குறைந்தபட்சம் ஐம்பது, அறுபது பேர் போதுமானது. மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த பனிப்பொழிவை நீக்கி, விமான ஓடுதளத்தை தயார் நிலையில் வைக்க வேண்டும்..!” என்றார்.

‘‘நாங்கள் அறுநூறு பேரை தருகிறோம்’’ என அர்ஜூன் கூறியதும், அதிர்ந்து போன அதிகாரிகள், “இந்த நள்ளிரவில் அத்தனை பேர் உங்களால் தர இயலுமா” என ஆச்சர்யமாக கேட்க, அர்ஜூன், “ஐயா..! நீங்கள் எங்களை அங்கே கொண்டு செல்ல வாகன வசதிகளை மட்டும் ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் இன்னும் 45 நிமிடங்களில் தயாராக இருப்போம்” என்று கூறினார். என்ன ஒரு அர்ப்
பணிப்பு சேவை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு என்பதை அன்று அந்த அதிகாரி கண்டு வியந்தார். அடுத்த அரைமணி நேரத்தில், 600 ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் அங்கே ஓர் ராணுவமென அணிவகுத்தனர்.

ராணுவ அதிகாரி “பனிப்பொழிவை நீக்கும் பணி ஆரம்பித்து விட்டது.. நீங்கள் எந்த நேரத்திலும் ராணுவ விமானங்களை இங்கே அனுப்பலாம்.. தயார் நிலையில் உள்ளோம்” என டெல்லிக்கு தகவல் அனுப்பினார். ஆச்சர்யப்பட்டுப் போன டெல்லி தலைமையகம், “தயார் நிலையா…? அதற்குள் எப்படி இவ்வளவு வேலையாட்களை சேகரித்தீர்கள்..!” எனக் கேட்க,

அதிகாரி, “அறுபது பேர் அல்ல! அறுநூறு பேர். அவர்கள் லேபர்கள் அல்லர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக்குகளின் உறுப்பினர்கள், என பதில் தந்தார்..! அன்று இரவு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கடுமையாக கடமையாற்றிக் கொண்டு இருந்தனர்.

மறுநாள் அக்டோபர் 27 அன்று 329 சீக்கிய ராணுவ வீரர்களைச் சுமந்து கொண்டு பாரத ராணுவ விமானம், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.. ஒன்றல்ல, இரண்டல்ல…. எட்டு விமானங்கள் தரை இறங்கின. அத்தனை ராணுவ வீரர்களும் ஆயுதங்களோடு, இறங்க உதவி செய்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், போர்த் தளவாடங்களை அதன் நிலைகளில் நிறுவவும் உதவினர்.

விமான நிலையம் எதிரிகள் பிடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டதோடு, ராணுவ வீரர்களின் ஓய்வு நேர இடைவெளிகளையும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தங்களின் சேவையினால் நிரப்பினார்கள்.

ஆதாரம்: Na Phool Chadhe Na Deep Jale

என்ற நூலில் இருந்து..

இப்போது சொல்லுங்கள்… ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத, மதவாத இயக்கம் எனக் கூவுபவர்களே…! நாங்கள் காவி தீவிரவாதிகளா… தேசத்தை உயிரென மதிக்கும் சேவகர்களா..! கடமை, அர்ப்பணிப்பு என்பவற்றிற்கு அர்த்தம் தெரியுமா…!?

இங்கே பாரதத்தின் முதல் ஹிந்து தீவிரவாதி ஓர் ஆர்.எஸ்.எஸ்காரன் என கூவும் முன், சரித்திரத்தின் ரத்தம் பதிந்த தியாகத்தின் பக்கங்களையும் படியுங்கள்…!

–தொடரும்.