ஷாகா மாடலுக்கு மாற்று கிடையாது’’

 

இன்றும் கூட சங்கம் டாக்டர் ஹெட்கேவார்ஜி, ஸ்ரீ குருஜி ஆகியோரின் ஆதாரமான கருத்துக்களின்படி நடக்கிறது. ஏதாவது மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்த மாற்றம் எவ்வாறு செய்யப்படுகிறது?

டாக்டர்ஜி, ஸ்ரீ குருஜி, தேவரஸ்ஜி ஆகியோரின் சிந்தனைகள் சனாதன பாரம்பரியத்திலிருந்தோ கலாச்சாரத்திலிருந்தோ வேறுபட்டவை அல்ல. ஆழ்ந்து சிந்தித்து கார்யகர்த்தாக்களின் நேரடி சோதனைகளின் ஆதாரத்தில் சங்க செயல்முறை திடப்பட்டுள்ளது; அப்படியே தொடர்கிறது. ஆரம்பத்திலிருந்தே எழுத்துக்கு எழுத்து பின்பற்றுவது, தனிநபரை சார்ந்திருப்பது, கண்மூடித்தனமான ஈடுபாடு இவற்றுக்கு அதில் இடமில்லை. நமக்கு கொள்கை ஆதாரம் பிரதானம். நாம் பெரியோர் குணங்களையும் அவர்கள் காட்டும் திசையையும் பின்பற்றுவோம். ஆனால் இடம், காலம், சூழ்நிலைக்கு ஏற்ப நமக்குரிய பாதையை வகுத்துக் கொள்கிறோம்.

எனவே, நித்தியம்  / அநித்தியம் அறியும் விவேகம் தேவை. சங்கத்தில் நித்தியமானது எது? ஒருமுறை தேவரஸ்ஜி ‘இந்த ஹிந்துஸ்தானம் ஒரு  ஹிந்து ராஷ்ட்ரம்’ என்று கூறினார், சங்கத்தில் இந்த விஷயத்தைத் தவிர மற்ற அனைத்தையும் மாற்ற முடியும். ஒட்டுமொத்த ஹிந்து சமுதாயமும் இந்த நாட்டிற்கு பொறுப்பான சமுதாயம். இந்த நாட்டின் சுபாவமான கலாச்சாரம் ஹிந்துக்களின் கலாச்சாரம். எனவே இது ஒரு ஹிந்து நாடு. இதை மனதில் கொண்டுதான் எல்லாம் செய்ய வேண்டும். எனவே, “நமது புனிதமான ஹிந்து தர்மம், ஹிந்து கலாச்சாரம், ஹிந்து சமுதாயம் ஆகியவற்றை பாதுகாக்கும்” அதே வேளையில் “எல்லாத் துறைகளிலும் ஹிந்து தேசத்தின் முன்னேற்றம்” பற்றியும் சொல்கிறது ஸ்வயம்சேவகரின் பிரதிக்ஞை.

ஹிந்து என்பதன் விளக்கம் பரந்தது. அந்த விளக்கத்திற்கு உட்பட்டு, நமது திசையை உறுதியாக கடைபிடித்தவாறு இடம், காலம், சூழ்நிலை இவற்றுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்து கொள்ள போதிய வாய்ப்புகள் உள்ளன. “நான் சங்கத்தின் அங்கத்தினன் ஆகி விட்டேன்” என்றும் பிரதிக்ஞையில் வருகிறது. அங்கத்தினர் என்றால் சங்கத்தை வேர் பிடிக்கச் செய்பவர், சங்கத்தின் குறு வடிவம் அவர். சங்கத்தின் பிரிக்கப்பட முடியாத  அங்கம் அவர்.

எனவே சர்ச்சாவின் போது வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருக்க முழுமையான கருத்துச் சுதந்திரம் உள்ளது. கருத்து ஒருமித்து
ஒரு முடிவெடுக்கப்பட்டவுடன், அனைவரும் ???? ???????? ?????? ??????? ??????????
??? அந்த முடிவில் அவரவர் கருத்தை சங்கமித்து
ஒரே திசையில் முன்னேறுகிறார்கள். எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே செயல்படும் சுதந்திரத்துடன் அனைவரும் ஒரே திசையில் பயணிக்கிறார்கள். நாம் நித்தியத்தை (நிரந்தரத்தை) கட்டிக் காக்கிறோம்; இடம், காலம், சூழ்நிலைக்கு ஏற்ப அநித்தியத்தை (தற்காலிகத்தை) மாற்றியபடி முன்னேறுகிறோம்.

சங்கத்தை வெளியில் இருந்து பார்ப்பவர்கள், அதன் சூழலை அனுபவிக்காதவர்கள், அமைப்பின் கட்டமைப்பைப் புரிந்துகொள்கிறார்கள், உயர்மட்டத்தைப் புரிந்துகொள்கிறார்கள், வேலை பகிர்வையும் பார்க்க முடியும், திசையைப் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் இவ்வளவு நீண்ட பயணத்தின் போது விவாதத்துக்கும் சுயபரிசோதனைக்கும் என்ன ஏற்பாடு?

குறிக்கோளும் எதிர்பார்ப்பும் தெளிவாக உள்ள ஒரு முறை உருவாக்கப்பட்டுள்ளது.  ஆனால் அவற்றை செயல்படுத்தும் முறை மாறுபடலாம். கட்டமைப்பு மாறலாம்; ஆனால் கட்டமைப்பின் உள்ளுறை உறுதியாக உள்ளது. சூழ்நிலையுடன், மனநிலையும் முக்கியத்துவம் கொண்டது. எனவே, எங்கள் பயிற்சிகளில் நாட்டின் நிலைமை, சவால்கள் போன்றவற்றைப் பற்றி நிறைய சிந்தனை செய்வோம். கூடவே, அந்த சந்தர்பங்களில் ஸ்வயம்சேவகர் எப்படி இருக்க வேண்டும், அமைப்பு எந்த பண்புகளின்  ஆதாரத்தில் உருவாக்கப்படுகிறது. அந்த குணங்களை அவரவர் நம்மில் வளர்த்துக் கொள்ள நாம் என்ன செய்கிறோம் என்பது குறித்தும் சிந்திப்போம்.

பிரார்த்தனையில் நமது ஒட்டுமொத்த சங்கல்பமும் பிரதிக்ஞாவில் ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் தனிப்பட்ட சங்கல்பமும் நாள்தோறும் நினைவுகூரப்படுகிறது. பிரதிக்ஞாவில் எங்கும் “நாங்கள்” என்ற வார்த்தை இல்லை. ‘நான் பிரதிக்ஞை செய்வது’, ‘நான் சங்கவேலை செய்வேன்’, நான் இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன்’, என்பதுதான் உறுதிமொழி. தன்னிலிருந்து தொடங்குபவர் என்பதே ஸ்வயம்சேவகர் என்பதன் பொருள்.

அங்கத்தினன் என்ற வார்த்தையின் அர்த்தம் ‘நான் எப்படி இருக்கிறேனோ, சங்கமும் அப்படியே உள்ளது, சங்கம் எப்படி இருக்கிறதோ, அப்படியே நானும் உள்ளேன்’ என்பதாகும். கடலின் ஒவ்வொரு துளியும் கடலைப் போல, கடல் என்பது எல்லாத் துளிகளின் கலவையால் உருவாகிறது. ‘ஒன்று’க்கும் ‘முழுமை’க்கும் இடையிலான இந்த உறவு ஆரம்பத்திலிருந்தே சங்கத்தில் இருந்து வருகிறது. ஸ்வயம்சேவகர் சுயபரிசோதனை தொடர்ந்து நடக்கிகிறது. வெற்றிக்கான பெருமை முழு சங்கத்திற்கும் செல்கிறது. தோல்வியுற்றால், எந்த ஒரு  ஸ்வயம்சேவகரும் ‘நான் எதில் தவறிவிட்டேன்?’ என்று யோசித்துப் பார்ப்பார். ஸ்வயம்சேவகர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி இதுதான்.

சமுதாயம் மாறிவிட்டது, வாழ்க்கை முறை மாறிவிட்டது. இன்றைய சூழ்நிலையில் சங்கத்தின் தினசரி ஷாகா மாடல் எப்பொதும் போல பயனுள்ளதாக இருக்கிறதா அல்லது அதற்கு ஏதேனும் மாற்று ஏற்பாடும் உள்ளதா?

ஷாகா நிகழச்சிகளுக்கு மாற்று ஏற்பாடு இருக்கலாம், அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் ஒன்றுகூடுவது, நற்பண்புகளை கூட்டாக கடைபிடிப்பது, ‘தாய்நாட்டிற்காக செயல்படுகிறோம், தாய்நாட்டின் மகோன்னத நிலை வருவதற்காக உழைக்கிறோம்’ என்ற விழிப்புணர்வை தினமும் மனதில் பதிய வைப்பது இவைதான் ஷாகா சாராம்சம். ஒருவரையொருவர் சந்திப்பது, ஒத்துழைப்பது, இதுவே மையக்கரு. இதற்கு மாற்று ஏற்பாடு இல்லை. சாமானியன் சாமானியனே. அவர் ஷாகா சுழலில் இணைந்திருக்கும்போது அசாதாரணமானவர். இவ்வாறு ஒரு சாதாரண மனிதர் கூட அசாதாரணமான வேலையைச் செய்கிறார், அசாதாரண தியாகங்களையும் செய்கிறார். ஆனால், அதற்கான சூழல் தேவை என்றால் அந்த சூழலுடன் இணைவது அவசியம்.

முன்னுதாரணமும் கனிவான பரிவும் மாற்றத்திற்கான கிரியாஊக்கி; வேறு எதுவும் அல்ல.. உலகில் எங்கு சென்றாலும், மாற்றம் ஏற்படும் போதெல்லாம், ஒருவர் முதலில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும். ஒரு மாடல் இருக்கும். அதைப் பார்த்து மக்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. தொலைவில் இருப்பதன் மூலம் இதைச் செய்ய முடியாது, ஒருவர் உயிர் நண்பர் ஆக வேண்டும்; பக்கத்திலேயே இருக்க
வேண்டும். பல பெரியோர்கள் இருக்கிறார்கள், எல்லா பெரிய மனிதர்களையும் நான் அறிவேன். அவர்கள் மீது எங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனால் நான் யாருடன் நெருக்கமாக இருக்கிறேனோ, அவர் நடந்து கொள்ளும் விதத்திலேயே நானும் நடந்து கொள்கிறேன். எனக்கு நெருக்கமானது எதுவோ அதை மட்டுமே பார்த்து நடக்கிறேன். என் நண்பர்; என்னை விட சற்று சிறந்தவர்; அவரைப் பின்பற்றுகிறேன் இது மாற்றத்திற்கான நிரூபிக்கப்பட்ட முறை. எங்கும் இது மாறவில்லை. அந்த வகையில் ஷாகாவுக்கும் மாற்று மாடல் இல்லை.

நிகழ்ச்சிகள் உள்பட எல்லாம் மாறலாம்; முன்னரே அதற்கு அனுமதி உண்டு. ஷாகா நடக்கும் நேரம் மாறலாம். சீருடை மாறலாம். ஷாகா நிகழ்ச்சிகளும் விதவிதமானவையாக இருக்கலாம். ஆனால் ஷாகாவுக்கு மாற்று இல்லை.   ஒருபோதும் ஷாகா நிகழ்காலப் பொருத்தமற்றது ஆகாது. வளர்ந்த நாடுகளிலிருந்து பலர் வந்து நமது ஷாகா மாடல் பற்றி ஆய்வு செய்கிறார்கள். ஷாகா பற்றிக் கேட்டறிகிறார்கள். வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நாம் சிந்திக்கிறோம். இதுபோன்ற விவாதங்களில் நான் இதுவரை 6-7 முறை பங்கேற்றுள்ளேன். ஆனால் இதுவரை நாம் செய்ய வேண்டியதைச் செய்வதற்கு மாற்று வழி எதுவும் கிடைக்கவில்லை.

1920கள் ‘சித்தாந்தங்களின் சகாப்தம்’ என்று கூறப்படுகிறது. ஒருபுறம், இடதுசாரி, சோஷலிசம் மற்றும் முதலாளித்துவம் போன்ற சித்தாந்தங்கள் 1925 100 செழித்து வளர்ந்தன என்றால்  மறுபுறம், சங்கமும் 1925 இல் தொடங்கியது. இந்த 100 ஆண்டு காலகட்டத்தில் இடதுசாரி, சோஷலிசம், முதலாளித்துவம் அனைத்தும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, தடைகள் இருந்தபோதிலும் சங்கம் மட்டுமே முன்னேறி வருகிறது. அப்படி என்ன வித்தியாசம்? இதைப் பற்றி தாங்கள் என்ன சொல்வீர்கள்?

பகவத் கீதை சொல்கிறது: “அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச பிருதக் விதம்; விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா; தைவம் ச ஏவ அத்ர பஞ்சமம்” (எடுத்த காரியத்தில் வெற்றி கிடைப்பதற்கு கொள்கை ஆதாரம், செயல்பாட்டாளர், பல்வேறு கருவிகள், விதவித முயற்சிகள், இவற்றிற்குப் பிறகு ஐந்தாவதாக அதிர்ஷ்டம் வருகிறது – இது பகவத் கீதை  18வது அத்தியாயம் 14வது செய்யுளின் பொருள்). அதிர்ஷ்டம் ஐந்தாவது. அறம், பொருள், இன்பம், வீடு எல்லாம், அதாவது புருஷார்த்தம், தொடர்கிறது. புருஷார்த்தம் நான்கு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. பல்வேறு வகையான முயற்சிகளை விளக்க வேண்டிய அவசியமில்லை; செய்ய வேண்டிய வேலைக்கு மக்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் கொள்கை ஆதாரம் (சித்தாந்தம்)  சத்தியமாக அமைய வேண்டும். சித்தாந்தத்தில் எந்த அளவிற்கு சத்தியம் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது நித்தியம் (நிரந்தரம்) ஆகிறது. அதை அடிப்படையாகக் கொண்ட அனைத்தும் நித்தியமானவை.

நமது கொள்கை ஆதாரம் ஹிந்துத்துவா. இது சிருஷ்டி (படைப்பு) அனைத்தும் ஒன்றியுள்ளது என்ற உலகளாவிய என்ற சத்தியம் நமது சிந்தனைக்கு அடிப்படை. பிடித்துவைத்தால் பிள்ளையார்; ஆனால் பரம்பொருள் நீக்கமற நிறைந்துள்ளது… இதுதான் சுற்றுச்சூழல் தொடங்கி மற்ற எல்லா விஷயங்களிலும், விதை போன்ற ஒரே விஷயம். இதிலிருந்து தூய சாத்விக அன்புதான் ஒருவரின் செயலுக்கு அடிப்படை என்பது தானாகவே தெளிவாகி விடுகிறது. அன்பு நித்தியமானது என்பதை நாம் அறிவோம். வெறுப்பு பிறந்து இறந்து விடுகிறது. நமது கொள்கை ஆதாரம் உறுதியானது. அது சத்தியம். ‘கண்கூடான அனுபவம் இது; ஏட்டுச் சுரைக்காய் அல்ல’ என்பது ஸ்வயம்சேவகர் ஒவ்வொருவரும் சங்கத்தில் பெறும் அனுபவம். புதியவர்கள் பயிற்சி முகாமுக்கு வருகிறார்; அவர் முகாமில் அறிமுகமே இல்லாத, பல்வேறு மொழியினர் மத்தியில் பழகுகிறார்; 30 நாட்களில் அவர்கள் சகோதரர்களைப் போல ஆகிவிடுவதை பார்க்கிறார். வீடு திரும்பும் நாளன்று தன்னை அறியாமல் அவர்  கண்களில் கண்ணீர் வருகிறது, அப்போது தான் தூய சாத்விக அன்பு பற்றிச் சொல்வது உண்மை என்றும். நாம எல்லாரும் ஒண்ணு என்பது நிஜம் என்றும் புரிகிறது இதுதான் நமது கொள்கை ஆதாரம்.

இதை அனுசரித்து ஒரு கார்யகர்த்தா சங்கவேலை செய்ய வேண்டுமானால், அவரிடம் பொருத்தமான குணங்கள் அமைய வேண்டும். ‘தேசம் உயர்ந்த பெருமித நிலையை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்; ஒரு மாநகராட்சி சீட் பெற நான் ஓடினால்?’ அந்த லட்சியப் பணி நடக்காது. நேர்மையுடன், தன்னலமற்ற உள்ளத்துடன், உடல், மனம் பொருள் தந்து லட்சியப் பணி, வீர விரதம், லட்சியப் பிடிப்பு,
சக்தி சீலம், ஞானம், ஆகிய (பிரார்த்தனையில் நாம் கோருகிற) ஐந்தும் வாய்ந்தவராகி எவர் ஒருவர் லட்சியப் பணி செய்கிறாரோ அவர் மட்டுமே சங்கத்தில் நீடிப்பார். இதற்கு  பொருத்தமாக  நம் வழிமுறை உள்ளது. இதை ‘கரண்’ என்கிறோம். கார்யகர்த்தாவை தகுதி வாய்ந்தவராக்க சரியான வழிமுறை நம்மிடம் உள்ளது. ஒரு லட்சியத்தை  நிர்ணயித்து அதை நோக்கி தொடர்ந்து பணிபுரிகிறோம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ, அதை எல்லாம் செய்கிறோம். இது மனித முயற்சியின் நான்கு அம்சங்களையும் நிறைவேற்றுகிறது என்று நான் நினைக்கிறேன், அதனால்தான் நாம் முன்னேறிச் செல்கிறோம். அந்த கொள்கை ஆதாரத்தில் அந்த குணங்கள் வாய்க்கப் பெற்று, நம் செயல் முறையை கடைபிடித்து, அதில் நித்தியமானதை எடுத்துக்கொண்டபடி செய்ய வேண்டிய பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தோமானால் நம் லட்சியத்தை நாம் எய்துவோம்.                                 

(தொடர்ச்சி அடுத்த இதழில்)