விருப்ப ஓய்வு கேட்கும் காவலர்கள்

காவல்துறையில் பணி கிடைக்க பலரும் ஆர்வமாக காத்திருக்கும் வேளையில், திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறையில் பணிபுரியும் 24 சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள், 3 சப் இன்ஸ்பெக்டர்கள், 1 இன்ஸ்பெக்டர் மற்றும் 1 தலைமைக் காவலர் உட்பட 29 காவலர்கள் கடந்த 20 மாதங்களில் விருப்ப ஓய்வு பெற்றுள்ளனர். இதற்கு விண்னப்பங்களில் அவர்கள் குடும்பப் பிரச்னைகள், உடல்நலப் பிரச்னைகள் போன்றவற்றையே காரணமாக குறிப்பிட்டுள்ளனர். எனினும், இதன் பின்னணியில் பணி அழுத்தம், அரசியல் தலையீடு, அதிக வேலைப்பளு போன்றவை முக்கிய காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், இருவர் விண்ணப்பித்த சில நாட்களில் இறந்துவிட்டனர். ஒரு எஸ்.எஸ்.ஐ தற்கொலை செய்துகொண்டார் என்று வெளியாகும் செய்திகள் பணி அழுத்தம் என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையிலேயே உள்ளது. காவல்துறை, இவர்களின் விருப்ப ஓய்வுக்கு பணி அழுத்தம் என்ற காரணத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளது.