வரதட்சணை தராததால் தலாக்

பெங்களூரு சுத்தகுண்டே பாளையா பகுதியில் வசித்து வருபவர் முகமது அக்ரம். இவரது மனைவி தஸ்சியா. இவர் காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அதில், ‘எங்களுக்கு திருமணம் நடந்த போது ரூ. 30 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனாலும் மேலும் பெற்றோர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரும்படி முகமது அக்ரம் கொடுமைப்படுத்துகிறார். ரம்ஜானுக்கு பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த போது ரூ.10 லட்சம் வாங்கி வந்தால் மட்டும் வீட்டுக்கு வரவேண்டும். இல்லையெனில் வர வேண்டாம் என்று கூறினார். நான் பணம் வாங்கி வராததால், என்னிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக தெரிவித்தார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இதுகுறித்து காவல்துறையினர் முகமது அக்ரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.