ராணுவ பேச்சுவார்த்தை

பாரதத்தின் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதை அடுத்து பாரத சீன ராணுவத்துக்கு இடையே கடந்த ஆண்டு மோதல் மூண்டது. இதை முடிவுக்கு கொண்டு வர இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தையில் படைகளை விலக்கி கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டு எல்லையின் சில நிலைகளில் இருந்து இருதரப்பும் தங்கள் படைகளை விலக்கிக் கொண்டன. இந்நிலையில் ராணுவ கமாண்டர்கள் அளவிலான, 12வது சுற்று பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.