மாணவரிடம் உளவுத்துறை விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள நீலிக்கொல்லை மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் அனஸ் அலி. பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் இவரிடம், மத்திய உளவுத்துறையான ஐ.பி பிரிவு காவல்துறையினரும் கியூ பிரான்ஞ் போலீசாரும் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அனஸ் அலியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், லண்டன், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்களுடன் அவர் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் யார் என்பது குறித்து உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.