மன்னிப்பு கேட்ட ஜெயராஜ் ரமேஷ்

நிதிமுறைகேடு செய்தார் என, தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவலின் மீது அவதூறு கூறினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ். தற்போது தன் செயலுக்காக விவேக் தோவலிடம் நிபந்தனையற்ற மன்னிப்புm கேட்டுள்ளார். ‘தேர்தலின்போது தவறுதலாக நான் இது கூறினேன். காங்கிரஸ் கட்சி இதை குறித்த தன் பேட்டியை கட்சியின் இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும்’ என கூறியுள்ளார் ஜெய்ராம் ரமேஷ். முன்னதாக விவேக் தோவல் ஜெய்ராம் ரமேஷ் மீது மன்னிப்பு கேட்ட மானநஷ்ட வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.