மதமாற்ற புகார் பாதிரியார் கைது

உத்தர பிரதேசத்தில் பாரபங்கி மாவட்டம் சக்கார் கிராமத்தைச் சேர்ந்த மக்களை, சிலர் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றுவதாக தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், மத மாற்றத்தில் ஈடுபட்டதாக பாதிரியார் உட்பட 10 பேரை கைது செய்தனர். போலீசார் கூறியதாவது:

சக்கார் கிராமத்தில் ஒட்டு மொத்தமாக மத மாற்றம் நடப்பதாக புகார் வந்தது. 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களில் கர்நாடக மாநிலம் மங்களூரை சோந்த பாதிரியார் டொமினிக் பிந்து உட்பட, 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.