போலி கரன்சி வழக்கு

கர்நாடக மாநிலம் பெலகவியில் போலி ரூபாய் நோட்டு மோசடியில் ஈடுபட்ட சாரிஃபுல் இஸ்லாம் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ 82,000 மதிப்பிலான போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தால் அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் சதாம் ஷேக், ஹகிம் என்ற இரு வங்கதேச குற்றவாளிகளிடம் இருந்துதான் இந்த பணம் கைமாறியதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான அவ்விருவர் மீதும் என்.ஐ.ஏ, பெங்களூரு என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.