புத்தக அறிமுகம்

திருப்பூரில் நடவு பதிப்பகம் மற்றும் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘கரிகாலன் சபதம்’ நாவல் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய சிந்தனைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி ராஜேந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். திருப்பூர் நடவு பதிப்பக நிறுவனரும் கவிஞருமான முத்துபாரதி புத்தகத்தை வெளியிட்டார். திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் கவிஞர் சிவதாசன் நாவலை பெற்றுக் கொண்டார்.