பி.எப்.ஐ சதி அம்பலம்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “சமீபத்தில் தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ அமைப்பு ஒரு தேச துரோக அமைப்பாகும். தேச துரோக செயல்கள், பயங்கரவாதத்தை நிகழ்த்துகின்றனர். இதற்கு முன் மும்பையில் நடந்த, தொடர் குண்டு வெடிப்பு போன்று, ஒரே நேரத்தில் பல இடங்களில் பயங்கரவாதம் நிகழ்த்த, பி.எப்.ஐ செய்த சதி செய்தது அம்பலமாகியுள்ளது. நாட்டின் முக்கியமான கட்டடங்களை, துவம்சம் செய்து, பாரதத்தில் உள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த, பாதுகாப்பை சீர்குலைக்க அந்த அமைப்பு சதி செய்கிறது. அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை தகர்க், பி.எப்.ஐ திட்டம் தீட்டுவதை மத்திய அரசு தீவிரமாக கருதுகிறது. இது தொடர்பாக தகவல் சேகரிக்கிறது” என்றுகூறினார்.