பா.ஜ.க நாடு தழுவிய ஆர்பாட்டம்

ஐ.நா சபையில் செய்தியாளர்கள் சந்திப்பில், பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, மோடியை ‘குஜராத்தை கசாப்பு கடைக்காரர்’ என்று தெரிவித்தார். இதற்கு மத்திய அரசும் வெளியுறவுத்துறையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது இந்த வெட்கக்கேடான, இழிவான கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இதனை கண்டித்து, நேற்று நாடு தழுவிய போராட்டங்களை பா.ஜ.க நடத்தியது. பல இடங்களில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவின் உருவ பொம்மையை கட்சியினர் எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். முன்னதாக, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பிரதமர் மோடி குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக பா.ஜ.கவினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.