பாரதத்தின் நல்லாட்சி நடைமுறைகள்

பாரதம் வந்துள்ள கேம்பியா நாட்டின் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ‘பாரதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் நல்லாட்சி நடைமுறைகளை உலகில் உள்ள பல நாடுகள் பின்பற்ற விரும்புகின்றன. மத்திய அரசின் ஆட்சி நிர்வாகத்தில் நவீன தொழில்நுட்ப உத்திகள் பின்பற்றப்படுகின்றன. கடந்த எட்டு ஆண்டுகளாக மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் தவறாமல் சென்றடைகின்றன. பாரதம், கேம்பியா இடையே இருதரப்பு உறவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.