பள்ளியில் தொழுகை

கர்நாடகாவில் உள்ள கோலார் மாவட்டம் சோமேஸ்வரபாலயாவில் பலேசங்கப்பா அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முஸ்லிம் மாணவர்கள் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தலையில் குல்லா அணிந்த தொழுகை செய்யும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து மற்ற மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், ஹிந்து அமைப்பினர் உள்ளிட்டோர் பள்ளி முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளிகளில் தொழுகை நடத்த அனுமதிப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். இதை அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.