நீரஜ் சோப்ராவிற்கு பாராட்டு

டைமண்ட் லீக் தொடரின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா கோப்பையை வென்றதன் மூலம் இத்தொடரின் வரலாற்றில் பாரத தேசத்தவர் ஒருவர் முதல் முறையாக வென்று சாதனையை படைத்திருக்கிறார் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் தனது டுவிட்டர் பதிவில் “புகழ்பெற்ற டைமண்ட் லீக் தொடரில் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ள முதல் பாரத வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். அவர் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தினார். அவரது தொடர் வெற்றிகள் பாரத தடகளத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு செயல்களை வெளிக்காட்டுகின்றன” என்றார்.