நீதி கேட்டு போராட்டம்

தூய ஹிருதய பள்ளி நிர்வாகத்தின் மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட தஞ்சை மாணவி லாவண்யா வழக்கில், நீதி கேட்டும் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கோரியும் இந்து முன்னணி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினரும், பா.ஜ.கவினரும் கலந்துகொண்டனர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க, மாநிலம் தழுவிய ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 24 ஜனவரியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்து அன்னையர் முன்னணி சார்பில் 25 ஜனவரியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் போராட்டமும், இந்து இளைஞர் முன்னணி சார்பில், 27 ஜனவரியில் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டமும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.