நீதித் துறையை காங்கிரஸ் மிரட்டுவது புதிதல்ல

ராகுல் காந்தி எம்.பி. பதவி நீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை சாக்கிட்டு நாடாளுமன்றத்தையும் தொடர்ந்து முடக்கி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தனர். இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கட்சி சார்பில் கடந்த 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மணிகண்டன், “நாங்கள் எப்போது ஆட்சிக்கு வருகிறோமோ, அப்போது, ராகுல் காந்தியை சிறைக்கு அனுப்பும் தீர்ப்பை வழங்கிய நீதிபதியின் நாக்கை துண்டிப்போம்” என மிரட்டல் விடுத்தார். இது குறித்து பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,, “இது ஒன்றும் புதிது அல்ல, நீதித்துறையை காங்கிரஸ் கட்சி அச்சுறுத்துவது முதன்முறையல்ல. நெருக்கடி காலத்திற்கு முன்பும் கூட காங்கிரஸ் கட்சியினர் நீதித்துறையை தாக்கி உள்ளனர். தற்போதும் அவர்கள் இதனையே செய்கின்றனர். ஏனெனில் அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்ய முடியாத எரிச்சலில் உள்ளனர். நாங்கள் அரசியல் சாசனத்தில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளோம்” என கூறினார்.