நிதின் கட்கரி அலுவலகத்திற்கு மிரட்டல்

மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் சொந்த ஊரான மகாராஷ்ட்டிராவின் நாக்பூரில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நேற்று மூன்று முறை தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாக்பூர் துணை காவல் ஆணையர் ராகுல் மதானே, தொலைபேசி அழைப்பு விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரி பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.